அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
கொரானோ ஊரடங்கில் புதிதாக இணையதளம் மூலமாக படத்தை வெளியிடும் முறையை ஆரம்பித்து வைத்தார் ராம்கோபால் வர்மா. ஆனால், ஒவ்வொன்றும் ஆபாசத்தை மையமாகக் கொண்ட படங்களாக அமைந்ததுதான் அதிர்ச்சியானது. 'பவர் ஸ்டார்' படம் மட்டும் அதற்கு விதிவிலக்கு. மற்றபடி 'கிளைமாக்ஸ், நேக்டு,' என இரண்டு ஆபாசப் படங்களை வெளியிட்டதன் வரிசையில் நேற்று 'த்ரில்லர்' என்றொரு படத்தை வெளியிட்டார்.
இந்த 'த்ரில்லர்' படம் வெறும் 24 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு ஆபாசப் படம்தான். இப்படத்தைப் பார்க்க 200 ரூபாய் கட்டணம் வசூலித்தார் வர்மா. பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பட வெளியீட்டிற்கு முன்பாக படத்தின் நாயகி அப்சரா ராணியின் ஆபாசப் படங்கள் சிலவற்றை படத்தின் போஸ்டராக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். ஆனால், படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லையாம். ஓரிரு ஆபாசக் காட்சிகளை மட்டுமே வைத்து தங்களை ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
“24 நிமிடப் படத்திற்கு 200 ரூபாயெல்லாம் ரொம்ப ஓவர். ஒரு காலத்தில் தன் படங்களால் இந்திய அளவில் பேசப்பட்டவர் 'இச்சை' விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படியாகிவிட்டாரரே” என்கிறார்கள் ரசிகர்கள்.
அடுத்து '12 ஓ கிளாக்' என்ற படத்தை இதே போன்று இணையதளத்தில் வெளியிட உள்ளார் ராம்கோபால் வர்மா.