'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை ஒரு கை பார்த்துவிடுவது என கங்கணம் கட்டிக்கொண்டது போல இருக்கிறது இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்தடுத்த செயல்பாடுகள். சமீபத்தில் சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் பவன் கல்யாணை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் 'பவர்ஸ்டார்' என்கிற படத்தை எடுத்து ஒடிடியில் வெளியிட்டார். இதற்கே பவன் கல்யாண் ரசிகர்ளிடம் இருந்து ஏகப்பட்ட கண்டனங்கள், அலுவலக தாக்குதல் என எதிர்கொண்டார் ராம்கோபால் வர்மா.
இதோ இப்போது அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் பற்றி தான் படம் எடுக்க போகிறாராம். படத்திற்கு அல்லு என டைட்டிலும் வைத்து விட்டார். வழக்கம்போல இதுவும் ஒரு கற்பனை கதை என சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் “ஒரு பிரபல நடிகர் ஜன ராஜ்ஜியம் என்கிற கட்சி துவங்குவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது... அதன் பின்னணியில் சினிமா தயாரிப்பாளரான அவரது மைத்துனர் எப்படி சில முடிவுகளை எடுக்கும் கிங் மேக்கராக இருக்கிறார் என்பததைத்தான் இந்தப்படம் சொல்லப்போகிறது” என கூறியுள்ளார் வர்மா.
இந்த வரிகள் போதாதா அவர் அல்லு அரவிந்த்தைத்தான் குறி வைத்துள்ளார் என்று சொல்தற்கு..? சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஜன ராஜ்ஜியம் ஆக மாற்றிவிட்டார். அதுமட்டுமல்ல படத்திலும், சிரஞ்சீவியின் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரபங்களின் பெயர்களில் சிறிதாக மாற்றம் செய்து, “அ ஆரவிந்த், கே.சிராஞ்சீவி, ப்ரவன் கல்யாண், அ ஆர்ஜுன், அ சீரீஸ், கே.ஆர் ச்ரரண், என் பீபு” என நக்கலாகவும் குறிப்பிட்டுள்ளார் வர்மா. சிரஞ்சீவியின் குடும்பத்தின் மீது இவ்வளவு கொலைவெறியா ராம்கோபால் வர்மாவுக்கு என ரசிகர்களே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.