பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
ஆஸ்கர் விருது வாங்கிய தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இவரின் இந்தப் புகார். சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறி உள்ளது. ரஹ்மானுக்கு ஆதரவாக தமிழ் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ரஹ்மான் குற்றச்சாட்டு குறித்து இந்தி நடிகரும் பிரபல இயக்குநருமான சேகர் கபூரும் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், உங்களுடைய பிரச்னை என்ன தெரியுமா? நீங்கள் ஆஸ்கர் விருது வாங்கிவிட்டீர்கள். பாலிவுட்டில் ஆஸ்கர் என்பது இறப்பை முத்தமிடுவது. இது, பாலிவுட் உங்களை கையாள்வதைவிட நீங்கள் திறமையானவர் என்பதை நிருபித்துள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், தொலைத்த பணம் திரும்பக் கிடைக்கும். புகழ் திரும்ப வரும். வீணாக்கிய நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான நேரங்கள் திரும்ப வராது. அமைதியாக இருப்போம். நகர்ந்து செல்வோம். நாம், செய்வதற்கு சிறப்பான விஷயங்கள் இருக்கின்றன என பதிலளித்தார்.
இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது வென்ற இந்தியரான ரசூல் பூக்குட்டியும், பாலிவுட்டில் தன்னை ஒதுக்கி விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பாலிவுட் இயக்குனர் சேகர் கபூரை டேக் செய்து வெளியிட்டுள்ள டுவீட்டுகளில், "ஆஸ்கர் விருது வென்ற பிறகு இந்தி பட உலகம் என்னை விலக்கி வைத்தது. யாரும் எனக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் நிலைகுலைந்து விட்டேன். சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்துக்கு நேராகவே, நீங்கள் எங்களுக்கு தேவையில்லை என கூறினர். இருந்தும் நான் கலையுலகை விரும்புகிறேன். அதுதான் எனக்கு கனவு காண கற்றுத்தந்தது. என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்.
எளிதாக என்னால் ஹாலிவுட்டுக்கு சென்றிருக்க முடியும். ஆனால் நான் செல்லவில்லை. போகவும் மாட்டேன். இந்தியாவில் பணியாற்றிதான் ஆஸ்கர் வென்றேன். அமெரிக்காவில் உள்ள மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் விருதுக்கு 6 முறை பரிந்துரைக்கப்பட்டு வென்றிருக்கிறேன். மற்றவர்களை விட எனது மக்கள் மீது, எனக்கு நம்பிக்கை உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து ரசூல் பூக்குட்டியும் பாலிவுட் மீது இப்படி புகார் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.