'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் நிலவும் நெபோடிசம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை கங்கனா ரணவத். குறிப்பாக ஒரு சில வாரிசு நட்சத்திரங்கள் மற்றும் சில இயக்குனர்கள் மீது தான் இவரது பாய்ச்சல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை நக்மா, நெபோடிசம் குறித்து பேசும் கங்கனா ரணவத், அந்த நெபோடிசத்தால் தான் தன்னை வளர்த்துக் கொண்டார் என சில ஆதாரங்களுடன் தனது கருத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இந்த கருத்துக்கு கங்கனா நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும் கங்கனாவின் சார்பாக இயங்கிவரும் அவரது சோசியல் மீடியா டீம் சில விளக்கங்களை பதிலடியாக கொடுத்துள்ளது.
இதுபற்றி அவர்கள் கூறியுள்ளதாவது : “நக்மா ஜி.. நீங்கள் சொன்னதுபோல ஆதித்யா பஞ்சாலி கங்கனாவின் பாய்பிரண்ட் அல்ல.. இதை ஏற்கனவே பலமுறை கங்கனா கூறியுள்ளார் அவர் ஒன்றும் கங்கனாவை இயக்குனர் அனுராக் பாசுவிடம் அறிமுகப்படுத்தவில்லை.. சொல்லப்போனால் அனுராக் பாசுவுக்கு ஆதித்ய பஞ்சாலியை அப்போது அவ்வளவாக தெரியாது என்று அவரே சிலமுறை குறிப்பிட்டுள்ளார்
அதேபோல கேங்ஸ்டர் படத்தில் கங்கனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது பலமுறை அவர் ஆடிசனில் கலந்துகொண்டு தேர்வானதால் தானே தவிர, இந்த நெபோடிசத்தால் அல்ல. கைட்ஸ் படத்தின் மூலம் ஹிரித்திக் ரோஷன் மூலமாக கங்கனாவுக்கு மறுவாழ்வு கிடைத்ததாக கூறியுள்ளீர்கள்.. ஆனால் அந்தப்படத்தில் ஒரு துணை நடிகை போல கங்கனா நடத்தப்பட்டதால் அவரது திரையுலக வாழ்க்கையை கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்தது.. அதனால் மீண்டும் ஹிரித்திக் ரோஷனுடன் நடிக்க விரும்பாவிட்டாலும் அவர் நடிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதுதான் உண்மை.
கங்கனா தனது சகோதரியையே தனது மேனேஜராக நியமித்துள்ளார் இது நெபோடிசம் இல்லையா என்று கேட்டுள்ளீர்கள்.. எந்த ஒரு ஏஜென்சியினரும் கங்கனாவுக்கு உதவியாக செயல்பட முன்வரவில்லை.. காரணம் அந்த ஏஜென்சிகள் சொல்படி கேட்டுக்கொண்டு, பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளிலும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் தன்மீது வீசி எறியப்படும் பணத்திற்காக நடனம் ஆடுவதற்கு கங்கனா விரும்பவில்லை.. அதனால்தான் சினிமா வியாபாரம் பற்றிய மிகப்பெரிய புரிதல் இல்லாத, ஆங்கிலம் கூட அரைகுறையாகவே தெரிந்த கங்கனாவின் சகோதரியே அவருக்கு மேனேஜர் ஆக வேண்டிய சூழல் உருவானது.. அதனால் இதுபோன்ற பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது