இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா |
இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் எம்.கே.ஆத்மநாதன் பற்றி இன்றைய இளைய தலைமறை அதிகம் அறிந்திருக்காது. ஆனால் அவர் பாடல்களை கேட்டு ரசித்திருக்கும்.
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, தடுக்காதே என்னை தடுக்காதே, குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா, உனக்காக எல்லாம் உனக்காக, இன்று போய் நாளை வாராய், ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் உள்பட 75 படங்களில் 120க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். நாலு வேலி நிலம், ரத்த பாசம் உட்பட 20 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிறந்த ஆத்மநாதன், நகை தொழில் செய்து வந்தார். நாடகத்தின் மீது கொண்ட ஆவல் காரணமாக 11 வயதில் சென்னை வந்து டி.கே.சண்முகம் நாடகக் குழுவில் நடிகராக அறிமுகமானவர். ரத்தபாசம்' படத்தில் பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப்பது ஏனோ?' பாடல் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். கலைமாமணி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளவர். 2013ம் ஆண்டு இதே நாளில் தனது 88வது வயதில் காலமானார். ஆத்மநாதன் சினிமாவில் செய்தது குறைவுதான். ஆனால் எல்லாமே நிறைவானது.