புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு | இயக்குனருடன் நெருக்கம் - மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு | நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் இசையமைப்பாளர் | இசையமைப்பாளருக்கு கேரள அரசு விருது : குஷி படக்குழு மகிழ்ச்சி | ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | இந்தியாவில் அதிக பிரபலமான நடிகைகள் : டாப் 10ல் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம் | இந்தியாவின் அதிக பிரபல நடிகர் : நம்பர் 1 விஜய், நம்பர் 6 அஜித்குமார் | ஜுன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா |
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் உருவான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன.
தற்போது மீண்டும் அவர்கள் இணைய உள்ள படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை கிட்டத்தட்ட 175 கோடி முதல் 200 கோடி வரை பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா, தற்போது கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே அவர் விஜய் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ராஷ்மிகாவும் தனது பேட்டிகளில் அதனை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் 65லாவது ராஷ்மிகாவின் கனவு நிறைவேறுகிறதா என பார்ப்போம்.