‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, 14 நாட்கள் தனிமையில் இருக்கவுள்ளார் நடிகை பிந்து மாதவி.தமிழகத்தில் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உள்ளவர் வீட்டில் மாநகராட்சியினர் ஸ்டிக்கர் ஓட்டி தனிமைப்படுத்தி வருகிறார்கள்.
இதில் நடிகை பிந்து மாதவியும் சிக்கியுள்ளார். அவர் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு வாசலை மாநகராட்சி நிர்வாகிகள் சீல் வைத்துவிட்டனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் பிந்து மாதவி "என்னுடைய குடியிருப்பில் இருக்கும் குடியிருப்பவாசிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்கப்போகிறோம் என பதிவிட்டுள்ளார்.