Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் - 86வது பிறந்த நாள்: பி.சுசீலாவை தெரியும், பி.லீலாவை தெரியுமா?

19 மே, 2020 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Did-you-Know-singer-P.Leela

திரைப்பட பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் பி.லீலாவை தெரியுமா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் தெரியாது என்று சொல்வார்கள். ஆனால் கீழ் கண்ட பாடல்களை அவர்கள் அடிக்கடி முனுமுனுத்திருப்பார்கள்.

"மாயமே நானறியேன் ..."
"கண்ணுடன் கலந்திடும் சுப தினமே ..."
"மாப்பிள்ளை டோய்... மாப்பிள்ளை டோய்..."
"வெண்ணிலவே தன்மதியே என்னுடனே வாவா .."
"நீதானா என்னை அழைத்தது ..."
"நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும்...."

இப்படியான ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர்தான் பி.லீலா. அவரின் 86வது பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பி.லீலா. கேரள மாநிலம், பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது மகளாக பிறந்தார். அப்பா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இசை, பாடல்கள் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். அதை தன் மகள்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் பி.லீலா.

பி.லீலாவுக்கு அப்போது பிரபலமாக இருந்த மணிபாகவதர் முதல் குருவாக இருந்து முறையான சங்கீத பயிற்சி அளித்து சீராக்கினார். பின்னர் பத்தமடை கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் என பல சங்கீத மேதைகளிடம் பயின்று இசை திறமையை வளர்த்துக்கொண்டார்.

12 வயதில் சென்னை ஆந்திர மகிள சபாவில் லீலா செய்த கச்சேரி, அவரை மிக பிரபலம் ஆக்கியது. பின்னர் தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள் செய்தார்.

1948ல் திரைத்துறையில் நுழைந்தார். 1968 வரை 20 ஆண்டுகள் தொடர்ந்தது. தென்னிந்திய மொழிகளில் 7000 பாடல்களை பாடி முடித்தார். எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பாடினார்.

வயது முதுமை காரணமாக பல ஆண்டுகள் பாடாமல் இருந்த அவர் இளையராஜா கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது இசையில் பாசில் இயக்கத்தில் உருவான, கற்பூர முல்லை என்ற படத்திற்காக "ஸ்ரீசிவ சுத பத கமல" என்ற பாடலை பாடி கொடுத்தார். இதுதான் அவர் பாடிய கடைசி பாடல்.

ஞானகோகிலம் , ஞானமணி, கலாரத்னம், கானவர்ஷினி என பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர் பி.லீலா. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். கேரள, தெலுங்கு திரை உலகமும் பல விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியது.

சென்னையில் தனது சகோதரி வீட்டில் தனது இறுதி காலத்தை கழித்த பி.லீலா, தனது 76வது வயதில் காலமானார். அவர் இறந்த மறு வருடம் மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கியது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கடைசி குடும்பமும் சொந்த ஊர் சேரும் வரை பணி ஓயாது: சோனு சூட்கடைசி குடும்பமும் சொந்த ஊர் சேரும் ... பயமுறுத்திய கண்கள்: செல்வராகவன் உருக்கம் பயமுறுத்திய கண்கள்: செல்வராகவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Vijay Kumar - Manama,பஹ்ரைன்
21 மே, 2020 - 13:41 Report Abuse
Vijay Kumar வஞ்சிக்கோட்டை வாலிபன் நடன போட்டி பாடல்....கண்ணும் கண்ணும் கலந்து ....சொந்தம் கொண்டாடுதே...என்னம் போல் உள்ளம்...பந்தாடுதே. இன்றும் ரசிக்க கூடிய அருமையான நடன காட்சியுடன் கூடிய பாடல்.
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
21 மே, 2020 - 13:32 Report Abuse
Vaduvooraan தென்னிந்தியாவின் மிக சிறந்த ஆளுமை பற்றி நினைவு கூர்ந்ததற்கு கோடானுகோடி நன்றிகள் Truly a versatile singer சுத்தமான கர்நாடக சங்கீதமா 'எல்லாம் இன்பமயம்' நாட்டுப்புற பாடலா- "தாழையாம் பூ முடிச்சு" கர்நாடக இசை கலந்த ஜனரஞ்சகமான மெல்லிசையா- "கண்ணும் கண்ணும் கலந்து" "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா"..நளினமான டப்பாங்குத்தா- "வாங்க மச்சான் வாங்க" ...கடைசி நாட்களில் சென்னை ஆலந்தூர் பகுதியில் வசித்துவந்தார் என்று நினைவு. கணீரென்று ஒரு அபூர்வமான வசீகரிக்கும் வெண்கலக்குரல்ஊடகங்கள் ஆதரவில்லாது போனதாலோ என்னவோ அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்ன செய்ய.. சில பேருக்கு திறமை இருந்தாலும் பரிமளிக்க முடியாமல் போய்விடுகிறது
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20 மே, 2020 - 22:50 Report Abuse
Bhaskaran Maayaabazaar thiraipadathil avarpaadiyapaadalkal kaalathaal aliyaathathu
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 மே, 2020 - 03:56 Report Abuse
meenakshisundaram இசை மேதை ஜி .ராமநாதனின் இசை அமைப்பில் இவர் பாடிய பாடல்கள் காலத்தினால் அழியாதவை.-பியானோ இசையுடன் 'தேன் மழை பொழியும் சிந்தையின் கீதம் ' பாடலுக்கு இணை உண்டா?அதே போல காத்தவராயனில் 'நித்திரை இல்லையடி சகியே .நிம்மதி இல்லையடி ',மற்றும் உத்தமபுத்திரனில் 'காத்திருப்பான் கமலக்கண்ணன் ' ஆகிய பாடல்கள் அவற்றுக்கென்றே இவர் பிறந்த மாதிரி இருக்கும்.
Rate this:
19 மே, 2020 - 22:48 Report Abuse
Narayanan K She was one of top play singer in Malayalam film industry. Her Narayaneeyam is very famous. She sung some of the best old malayalam classics.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in