‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வில்லன்கள் ஹீரோவாகும் காலம் இது. அந்த வரிசையில் தற்போது நிஜ ஹீரோவானவர் சோனுசூட். சந்திரமுகி, ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சோனு சூட், அடிப்படையில் பாலிவுட் நடிகர்.
கொரோனா கால சேவையில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். மும்பையில் உள்ள தனது ஓட்டலை கொரோனா பணிசெய்யும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கி இருக்கிறார். இதுதவிர புலம்பெயர்ந்து மும்பையில் தங்கி இருக்கும் தினக்கூலி பணியாளர்களுக்கு உணவு பொருளை வழங்கி வருகிறார். .
தற்போது மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பிற மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். ஏற்கெனவே மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியும் வைத்தார்.
இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூட். இதற்காக உ.பி அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னை பொறுத்தவரை இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். இந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு இப்படி தெருக்களில் அலைந்து திரிவதை பார்க்கையில் மனம் வலிக்கிறது. கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். இது என் இதயத்துக்கு நெருக்கமான விஷயமாக உள்ளது. இதற்காக என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுப்பேன்.
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.