சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ், இந்தியாவையும் ஆட்டிப்படைக்கிறது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஒரு மாதத்தை எட்ட உள்ளது. மேலும் இது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் நிதி கேட்டுள்ளனர். பணம் படைத்தவர்கள் முதல் சாதாரண நடுத்தர மக்கள் வரை தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், கொரோனா தொடர்பாக எந்த ஒரு அறிக்கையோ, நிதி உதவியோ அளிக்காமல் இருந்தார். எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காத நடிகர் அஜித்தே ரூ.1.25 கோடி நிதி அளித்து இருந்தார். ஆனால் சினிமா விழாக்களில் அரசியல் பேசும் விஜய், எதிர்காலத்தில் அரசியல் கனவோடு இருக்கும் அவர், எந்த உதவியும் அளிக்காமல் இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய். பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம், பெப்சி அமைக்கு ரூ.25 லட்சம், கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
இது தவிர தனது ரசிகர் மன்றங்களுக்கு தனியாக நிதியுதவி அளித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.