Advertisement

சிறப்புச்செய்திகள்

விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபம் எடுக்கும் முன்னணி நடிகர்களின் அமைதி

02 ஏப், 2020 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Corona-relief-fun-:-Tamil-cinema-top-actors-still-keeps-silent

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இயற்கைப் பேரிடர் எது வந்தாலும் மக்கள் தாங்களாகவே முன் வந்து உதவி செய்வார்கள். ஆனால், இந்த கொரானோ வெளியில் சென்றாலே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவும் வாய்ப்புள்ளது. எனவேதான், நாட்டில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு மேலும் பல உதவிகள் செய்ய நிதி தேவைப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் உதவி கோரி வருகின்றன. தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள் பலரும் பிரதமரின் நிவாரண நிதி, மாநில முதல்வர்களின் நிவாரண நிதி என கோடிகளிலும், லட்சங்களிலும் அவரவர் நிலைக்கேற்பக் கொடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் 25 லட்ச ரூபாய் அளித்துள்ளார். மற்ற யாருமே இதுவரை எந்த உதவித் தொகையும் அறிவிக்கவில்லை. குறிப்பாக இன்றைய முன்னணி நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் விஜய், அஜித் ஆகியோர் எந்த ஒரு உதவித் தொகையும் அறிவிக்காதது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் ஒரு தொகையை அறிவித்து தங்களது ரசிகர்களையும் உதவி செய்ய சொல்லிக் கேட்டால் பலரும் முன்வருவார்கள்.

தங்களது திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சி வேண்டும், நடு இரவு காட்சி வேண்டும் என அரசுக்கு தங்கள் தயாரிப்பாளர்கள் மூலம் கோரிக்கை வைக்கும் விஜய், அஜித் ஆகியோர் இந்த சமயத்தில் அரசின் கோரிக்கையை காதில் வாங்காமல் இருப்பது ஆச்சரியம்தான்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் கூட முதல்வர், பிரதமர் நிவாரணநிதிக்கு இன்னும் எந்தத் தொகையும் வழங்கவில்லை. அவர்களே தராத போது நடிகைகள் மட்டும் தருவார்களா என்ன ?. நாட்டுப்பற்று என்பது சுதந்திர தினம், குடியரசு தினம், போர்க்காலங்களில் மட்டும் தான் வரவேண்டும் என்பதில்லை. இம்மாதிரியான இக்கட்டான சூழலிலும் வர வேண்டும்.

Advertisement
கருத்துகள் (43) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் ஆகும் பிரசன்னாதயாரிப்பாளர் ஆகும் பிரசன்னா கொரோனா தடுப்புக்கு லதா ரூ.30 லட்சம் நிதி கொரோனா தடுப்புக்கு லதா ரூ.30 லட்சம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (43)

Srikrishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 ஏப், 2020 - 20:45 Report Abuse
Srikrishnan Dear Sir, As far as i know. Mr. Rajinikanth donated Rs 50 lakhs on first day for PM cares fund. Also actor Nayanthara has donated Rs. 20 lakhs to workers. But as mentioned in article it is very surprising to see starts like vijay ,kamal being silent.
Rate this:
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
07 ஏப், 2020 - 09:44 Report Abuse
Swaminathan Nath விஜய், அஜித் போன்றோருக்கு பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள்
Rate this:
Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 ஏப், 2020 - 15:24 Report Abuse
Kamal அரசியல் வாதிகள் முதலில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுக்கட்டும். பின்னால் இவர்களிடம் எதிர் பார்க்கலாம்.
Rate this:
mohankumar - Trichy,இந்தியா
05 ஏப், 2020 - 06:34 Report Abuse
mohankumar அம்பானி 100 கோடி கணக்கான ருபாய் மத்திய அரசு க்கும்,5 கோடி ரூபாய் மகாராஷ்டிர அரசுக்கும் ஓரு லட்சம் ஏழைகளுக்கு உணவு கொடுக்கிறார் .
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
04 ஏப், 2020 - 20:10 Report Abuse
S. Narayanan முன்னணி நடிகர்கள் பலர் தங்கள் படங்களின் வாயிலாக ஒரு கருத்தை மக்களுக்கு தெரிவிக்கிறார்கள். இப்போது மத்திய அரசின் கொரோன நிவாரண நிதிக்கு அவர்கள் எல்லோரும் நிதி வழகினால்தானே அவர்களுடைய கருத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். மேலும் அவர்கள் படங்களை மக்கள் தொடர்ந்து பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நிதி மக்களுக்கு தானே வழங்க போகிறார்கள். பிறகு ஏன் இந்த தயக்கம்.
Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in