விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இயற்கைப் பேரிடர் எது வந்தாலும் மக்கள் தாங்களாகவே முன் வந்து உதவி செய்வார்கள். ஆனால், இந்த கொரானோ வெளியில் சென்றாலே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவும் வாய்ப்புள்ளது. எனவேதான், நாட்டில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு மேலும் பல உதவிகள் செய்ய நிதி தேவைப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் உதவி கோரி வருகின்றன. தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள் பலரும் பிரதமரின் நிவாரண நிதி, மாநில முதல்வர்களின் நிவாரண நிதி என கோடிகளிலும், லட்சங்களிலும் அவரவர் நிலைக்கேற்பக் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் 25 லட்ச ரூபாய் அளித்துள்ளார். மற்ற யாருமே இதுவரை எந்த உதவித் தொகையும் அறிவிக்கவில்லை. குறிப்பாக இன்றைய முன்னணி நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் விஜய், அஜித் ஆகியோர் எந்த ஒரு உதவித் தொகையும் அறிவிக்காதது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் ஒரு தொகையை அறிவித்து தங்களது ரசிகர்களையும் உதவி செய்ய சொல்லிக் கேட்டால் பலரும் முன்வருவார்கள்.
தங்களது திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சி வேண்டும், நடு இரவு காட்சி வேண்டும் என அரசுக்கு தங்கள் தயாரிப்பாளர்கள் மூலம் கோரிக்கை வைக்கும் விஜய், அஜித் ஆகியோர் இந்த சமயத்தில் அரசின் கோரிக்கையை காதில் வாங்காமல் இருப்பது ஆச்சரியம்தான்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் கூட முதல்வர், பிரதமர் நிவாரணநிதிக்கு இன்னும் எந்தத் தொகையும் வழங்கவில்லை. அவர்களே தராத போது நடிகைகள் மட்டும் தருவார்களா என்ன ?. நாட்டுப்பற்று என்பது சுதந்திர தினம், குடியரசு தினம், போர்க்காலங்களில் மட்டும் தான் வரவேண்டும் என்பதில்லை. இம்மாதிரியான இக்கட்டான சூழலிலும் வர வேண்டும்.