'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து இயக்கி இருக்கும் படம், குருதி ஆட்டம். இதில், அதர்வா-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது: அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட இரு தாதாக்களின் கதை தான் குருதி ஆட்டம். மதுரையை கதைக் களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை. அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய நான்கு பேருக்கு இடையே நடை பெறும் சம்பவங்களே படம். படத்தில், பேபி திவ்யதர்சினியும் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். எட்டு தோட்டாக்கள் போலவே, இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.