Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 விபத்து: சம்பவ இடத்தில் ஷங்கரிடம் விசாரணை

18 மார், 2020 - 18:28 IST
எழுத்தின் அளவு:
Director-Shankar-Investigated-for-Indian2-Accident

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம், மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 19ல் பூந்தமல்லி ஈ.வி.பி.,பிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது பெரும் விபத்து ஏற்பட்டது. ராட்சத கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூன்று பேர் மரணமடைந்தனர்.
திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ஷங்கர், கதாநாயகன் கமல் உள்ளிட்ட படக் குழுவினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது.
இதைத் தொடர்ந்து விபத்து நடைபெற்ற ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஷங்கர், கமல் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

உடனே, இதற்கு தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் நடிகர் கமல். போலீஸார் தன்னை நடித்துக்காட்ட சொல்லி துன்புறுத்துவதாகவும் தன்னுடைய மனுவில் நடிகர் கமல் கூறியிருந்தார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நடிகர் கமல், இந்த விசாரணைக்கு செல்லத் தேவையில்லை என தீர்ப்பளித்தார். விசாரணைக்குத் தேவைப்பட்டால், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், அதிகாரிகள் முன் நடிகர் கமல் ஆஜராக வேண்டும் என்றும் இளந்திரையன் தன்னுடைய உத்தரவில் கூறியிருந்தார்.

இதனால், விபத்து நடந்த இடத்தில் நடிகர் கமல் தவிர்த்த மற்றவர்கள், படப்பிடிப்பு நடந்த பூந்தமல்லி ஈ.வி.பி., பிலிம் சிட்டியில், இன்று நேரில் ஆஜரானார்கள். இதில் இயக்குநர் ஷங்கரும் ஒருவர்.
ஏற்கனவே, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் இந்த வழக்கை விசாரித்து வரும் துணை ஆணையர் நாகஜோதி, சம்பவ இடத்தில் இருந்து, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விளக்கமாக கேட்டு வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா பயம் வேண்டாம் - அஷ்வந்த்கொரோனா பயம் வேண்டாம் - அஷ்வந்த் எல்லோருக்கும் மூன்று மடங்கு லாபம்: மோகன் ஜி பெருமிதம் எல்லோருக்கும் மூன்று மடங்கு லாபம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in