‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
கொலைகாரன் படத்திற்கு பிறகு தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம், பாலாஜி கே.குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.
இதற்கு இடையில் ஆள் படத்தில் ஜெட் லாக் என்ற விஷயத்தையும், மெட்ரோ படத்தில் சங்கிலி பறிப்பு என்கிற விஷயத்தை வைத்து படம் தந்த ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மீசைய முருக்கு படத்தில் அறிமுகமான ஆத்மிகா நடிக்கிறார். கந்தக்கோட்டை, வல்லக்கோட்டை, ராஜவம்சம் படங்களை தயாரித்த டி.டி.ராஜா தயாரிக்கிறார். ஜோகன் இசை அமைக்கிறார், என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் 3 கட்டமாக நடக்க இருக்கிறது.