'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதமாக தீவிரமாக நடந்தது. ஐதராபாத், சென்னை மற்றும் தாய்லாந்தில் 3 கட்டமாக படப்பிடிப்புகள் நடந்தது. இதன் 4வது கட்ட படப்பிடிப்பு0 புனேயில் ஒரு மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் திட்டமிட்ட படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. படப்பிடிப்பு நடக்கும் புதிய தேதி பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வெளிவருகிறது. இதில் முதல் பாகத்துக்கான 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அதிக காலம் தேவைப்படும் என்கிறார்கள். என்றாலும் அடுத்து ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாகத்தை வெளியிட இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருகிறது.