ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் | பிடித்தமான பாடலுக்கு நடனமாடுவது ரொம்ப பிடிக்கும் - தமன்னா | மகன்களுடன் முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் | கவனம் ஈர்க்கும் 'தூமம்' டிரைய்லர் | பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை |
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா உடன் 'மான்ஸ்டர்' என்ற படத்தில் நடித்தார். இருவரும் தற்போது 'பொம்மை' படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதற்கிடையே, எஸ்.ஜே.சூர்யா, தனது காதலை சொன்னதாகவும், அதற்கு பிரியா பவானி சங்கர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்த சூர்யா, 'பிரியா நல்ல தோழி' என்றார். பிரியா தரப்பில் இதுவரை பதில் வராமல் இருந்த நிலையில், முதன்முதலாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், என்னையும், எஸ்.ஜே.சூர்யாவையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர் பதற்றமாகி பதில் சொன்னதால், இந்த விஷயத்தை பெரிதாக பேசினர். உண்மையில் எங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது. கிசுகிசுக்களை பார்த்து எனது நண்பர்கள் கேலி செய்வதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே எனக்குள் இருந்தது,' என பிரியா விளக்கமளித்துள்ளார்.