மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா நடிக்கும் படம் அன்புள்ள கில்லி. பாலசுப்பிரமணியம், ஒளிப்பதிவு செய்ய, அரோல் குரோலி இசை அமைக்கிறார். இந்தப் படம் நாய்க்கும், மனிதனுக்குமான உறவை சொல்லும் படம். இதில் லாபர்டா வகை நாய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. அந்த நாயின் பெயர்தான் கில்லி.
படத்தின் ஹீரோ மைத்ரேயா விஜய் ரசிகராக நடிதுள்ளார். அத்துடன் சினிமாவில் நடித்து புகழ்பெற்ற நாய்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளன. நாயின் பார்வையில் கதை நகரும், நாயே கதையை சொல்லும், தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத் கூறியதாவது: அன்புள்ள கில்லி படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வுதான் இந்தக்கதை. நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள்.
இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை கொண்டிருக்கும். மேலும் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.