விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
'உன் நெத்தியில என் கன்-அஐ வைக்கும் போது சாவத் தாண்டி ஒரு பயம் தெரியும் பாரு' என்ற வசனம், வால்டர் படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் இந்த டிரைலர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பிரபுதிலக் தயாரித்துள்ள படம் வால்டர். நடிகர் சிபி ராஜ் கதாநாயகனாக நடிக்க, அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் படத்தில் ஷ்ரின் கான்ஞ்வாலா கதாநாயகியாக நடித்துள்ளார். ரித்விகா, நட்டி நட்ராஜ், சனம் ஷெட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் குற்ற விசாரணைத் திரைப்படமாக அமைந்துள்ள இந்தப் படத்தில், கும்பகோணம் ஏ.எஸ்.பி., வால்டராக சிபிராஜ் நடித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் குழந்தைக் கடத்தல் சம்பவங்களை மையமாகக் வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் டிரைலர் ஓடத் துவங்கும்போதே, ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் இந்தியாவில் நான்கு குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் தமிழ்நாட்டில் ஒரு குழந்தை காணாமல் போகிறது என்ற புள்ளி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
"டிரைலர் மற்றும் டீசரில் வருவது போன்ற அதிரடியான வசனங்கள் படம் முழுக்க இடம் பெற்று இருக்கிறது. படத்துக்கு இந்த வசனங்கள் கூடுதல் வலு சேர்க்கும். சிபி ராஜின் வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கும். சமீபத்தில் ரிலீசான சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியிலான படங்களில், இந்தப் படம் வித்தியாசமானதாக இருக்கும்" என்கிறார் படத்தின் இயக்குநர் அன்பு.