மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
கவண், வானம் கொட்டட்டும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மடோனா செபாஸ்டின். காதலர் தினத்தையொட்டி, அவர் காதலர் தினம் குறித்த தன்னுடைய அனுபவத்தை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி மூலம் கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில், மடோனா கூறியிருப்பதாவது: என்னுடைய பள்ளிப் படிப்பின் போது வந்த ஒரு காதலர் தினத்தை இன்று வரை என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் நாளில், அன்றைய பழைய சம்பவத்தை நினைத்து சிரித்துக் கொள்வேன். என்னுடைய பள்ளி வகுப்புத் தோழன் ஒருவர், பக்கத்துக்கு வகுப்பு பெண் ஒருவரை காதலித்தார். காதல் எங்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால், காதலர் தினத்தில் இருவரும் நேரில் சந்தித்து, தங்களுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவரையும் சந்திக்க வைத்தோம். இருவரும் ஒருவித தயக்கம்; பதற்றத்துடன் சந்திக்க சம்மதம் தெரிவித்தனர். திட்டமிட்டபடியே, இருவரையும் குறிப்பிட்ட ஒட்டலுக்கு வரவழைத்தோம். இருவரும் அருகருகே அமர்த்தப்பட்டு, பேச வைக்கப்பட்டனர். ஆனால், இருவரும் வெகு நேரம் ஆகியும், ஒருவரை மற்றவர் காதலிக்கும் விஷயத்தை சொல்லவே இல்லை. என்ன சாப்பிட்டாய்? என்ன படம் பார்த்தாய்? என்று ஏதேதோ பேசியபடியே நேரத்தைப் போக்கினர். கடைசி வரை காதலை சொல்லவே இல்லை. இதனால் வெறுத்துப் போய் கிளம்பி வந்து விட்டோம். ஒவ்வொரு ஆண்டும், காதலர் தினத்தன்று இந்த சம்பவம் என் மனதில் வந்து போகும் என்றார்.