சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ‛கோடீஸ்வரி'. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் கவுசல்யா, ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது திரைப்பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர். இப்போது நடிகை மீனா பங்கேற்றுள்ளார். போட்டியில் அவர் ரூ.3.20 லட்சம் வென்றுள்ளார்.
நிகழ்ச்சியின் போது தனது குழந்தை பருவம் தொடங்கி இப்போது வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனது மகள் நைனிகா தன்னைப் போலவே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானது தொடங்கி, தனது குழந்தைப் பருவத்தை மற்ற குழந்தைகளைப் போல் கழிக்காமல் தவற விட்டுவிட்டதாகவும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மீனா தெரிவித்தார்.
ரஜினியை அங்கிள் என அழைத்தது முதல் பின்னாளில் அவரை அத்தான் என கூறியது வரை சினிமாவில் தனது நீண்ட பயணத்தையும், தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆனது பற்றியும், ரஜினி உடன் 168 படத்தில் நடிக்கும் அனுபவங்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி நாளை(பிப்.,11) கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.