சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் மருதுகாசி. 250க்கும் மேற்பட்ட படங்களில் 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். நீல வண்ண கண்ணா வாடா (மங்கையர் திலகம்), சத்தியமே லட்சியமாய் கொள்ளடா (நீலமலை திருடன்), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்ல.. (பிள்ளைகனி அமுது) உள்ளிட்ட பல காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர்.
திருச்சி மாவட்டம் மேலகுடிகாடு கிராமத்தில் 1920ம் ஆண்டு பிப்ரவரி 13ந் தேதி பிறந்த மருதுகாசிக்கு வருகிற 13ந் தேதி நூற்றாண்டு தொடங்குகிறது. மருதுகாசியின் நூற்றாண்டு விழாவை அவரது குடும்பத்தினர் அவர் பிறந்த தினமான பிப்ரவரி 13ந் தேதி பிரமாண்டமாக கொண்டாடுகிறார்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த விழாவிற்கு புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து தலைமை தாங்குகிறார். கவிஞர் பிறைசூடன், மருதகாசியின் படத்தை திறந்து வைக்கிறார். சிறப்பு மலரை கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக் கொள்கிறார். விழாவில் மருதகாசியுடன் பணியாற்றிய கலைஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.