மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் மருதுகாசி. 250க்கும் மேற்பட்ட படங்களில் 4 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். நீல வண்ண கண்ணா வாடா (மங்கையர் திலகம்), சத்தியமே லட்சியமாய் கொள்ளடா (நீலமலை திருடன்), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்ல.. (பிள்ளைகனி அமுது) உள்ளிட்ட பல காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவர்.
திருச்சி மாவட்டம் மேலகுடிகாடு கிராமத்தில் 1920ம் ஆண்டு பிப்ரவரி 13ந் தேதி பிறந்த மருதுகாசிக்கு வருகிற 13ந் தேதி நூற்றாண்டு தொடங்குகிறது. மருதுகாசியின் நூற்றாண்டு விழாவை அவரது குடும்பத்தினர் அவர் பிறந்த தினமான பிப்ரவரி 13ந் தேதி பிரமாண்டமாக கொண்டாடுகிறார்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த விழாவிற்கு புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து தலைமை தாங்குகிறார். கவிஞர் பிறைசூடன், மருதகாசியின் படத்தை திறந்து வைக்கிறார். சிறப்பு மலரை கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக் கொள்கிறார். விழாவில் மருதகாசியுடன் பணியாற்றிய கலைஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.