அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். இதனை கேரளாவில் பதிவு செய்தால் அதிக வரி கட்ட வேண்டியது இருக்கும் என்பதற்காக புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதற்காக புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்துள்ளார். இதனை கேரள போக்குவரத்து துறை கண்டுபிடித்து சுரேஷ் கோபி மீது வழக்கு தொடர்ந்தது.
தற்போது இந்த வழக்கில் சுரேஷ் கோபி மீது கேரள கிரைம் பிராஞ்ச் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. திருவனந்தபுரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கலான குற்றப்பத்திரிகையில், "2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி புதுச்சேரியில் தனது ஆடி காரை பதிவு செய்த நடிகர் சுரேஷ் கோபி, அதற்கு ஆதாரமாக அளித்த வாடகை ஒப்பந்த ஆவணம் போலியானது" என்று கிரைம் பிராஞ்ச் கூறியுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சுரேஷ் கோபிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. என்கிறார்கள்.