டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை ரசிகர்களுக்கு சிம்பு எப்போதும் எங்க வீட்டு வேலன் தான். நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், படத்தொகுப்பாளர், நடன இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் சிம்பு.
ஒல்லியாக இருந்த சிம்பு ஒருகட்டத்தில் உடல்பருமனாகி உப்பி போய்விட்டார். தனது நடனத்தால் பலரையும் வியக்க வைத்த சிம்பு, அஅஅ படத்தில் ஒரு அசைவுக்கே மூச்சு வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் கவலைப்பட்டனர். குண்டான காரணத்தால் அவருக்கு படவாய்ப்புகளும் குறையத் தொடங்கியது. தற்போது அவர் வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒஸ்தி படப்பிடிப்பின் போது எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பெரிய வாழை இலையில், பிரியாணி குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே கோழி வறுவலும் இருக்க, அதை ஆறஅமர ஒருகைப்பார்க்கிறார் சிம்பு.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு தான் குண்டு ஆனிற்களா சிம்பு? என கமெண்ட் செய்துள்ளனர். பிறகு ஐந்து பேர் சாப்பாட்டை ஒரே ஆள் சாப்பிட்டா குண்டாகாம என்னாகும் என சிலர் நக்கல் செய்துள்ளனர்.