Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்: கனிகா

07 டிச, 2019 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Actress-Kanika-backs-to-tamilcinema

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கும் இந்த மியூசிகல் ரொமாண்டிக் திரைப்படத்தில், விஜய் சேதுபதி-மேகா ஆகாஷ் ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில், இவர்களோடு இயக்குநர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ் திருமேனி, நடிகர் விவேக் உள்ளிட்டோரும் நடிக்க, தற்போது, நடிகை கனிகாவும் இணைந்திருக்கிறார்.

இது குறித்து, நடிகை கனிகா கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் நடிக்க எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனாலேயே, தமிழகத்திலேயே தங்கி படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த சூழலில்தான், மலையாள பட வாய்ப்புகள் வந்தன. அங்கே சென்று நடிக்கத் துவங்கினேன். அங்கும், நான் பிசியான நடிகையாகத்தான் இருந்தேன். அதற்போது, நடிக விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தப் படத்துக்குப் பின், மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காட்டுமிராண்டிகளுக்கு பயம் தரும் என்கவுன்டர் : நயன்தாராகாட்டுமிராண்டிகளுக்கு பயம் தரும் ... சென்னையில் குவிந்த ரஜினி ரசிகர்கள் சென்னையில் குவிந்த ரஜினி ரசிகர்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in