எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது |
காற்றுக்கென்ன வேலி படத்தை இயக்கிய புகழேந்தி தங்கராஜ் இயக்கிய படம் கடல் குதிரை. தலைவாசல் விஜய், ரோகினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் படும் துன்பங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்தப் படத்தில் பிரசாந்தி என்பவர் ஹீரோயினாக நடித்தார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "எனது கடல் குதிரை படத்தில் இலங்கையை சேர்ந்த பிரசாந்தி என்பவர் கதாநாயகியாக நடித்தார். அவரையும், அவரது தாயாரையும் கியூ பிரிவு பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதன்பிறகு இருவரையும் காணவில்லை. அவர்களை கியூ பிரிவு போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கருகிறேன். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் "பிரசாந்தி போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றவாளியாக உள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் இங்கு இல்லை என்பதும், இலங்கைக்கு சென்று விட்டார் என்பதும் தெரியவந்தது. அவர் முறைப்படி இலங்கை சென்றாரா. அல்லது கள்ளத்தோணியில் தப்பிச் சென்றாரா என்பது குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது" என்று கூறினார். இதனை ஏற்ற நீதிமன்றம் புகழேந்தி தங்கராஜ் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.