ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தமிழ் திரைப்படங்கள் ரிலீசான சில மணி நேரங்களிலேயே, இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டப் பின், அவர் பைரசி படங்களை எப்படியாவது ஒழிப்பேன் என்று சொல்லி கங்கணம் கட்டினார்.
இதற்காக, போலீசில் புகார் மேல் புகார் கொடுத்தார்; ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில், நடிகர் விஷால் மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பிலும், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்திலும் உருவாகி இருக்கும் ஆக் ஷன் படம் ரிலீசாகி இருக்கிறது. ரிலீசான சில மணி நேரங்களிலேயே திருட்டு பதிவு மூலம், இணையதளங்களில் அந்தப் படம் வெளியாகி விட்டது.
இதற்கு முன் ஹெச் 3 சினிமா நிறுவனத் தயாரிப்பிலும், இயக்குநர் கஸாலி இயக்கத்திலும் உருவான படம் மனுஷனா நீ. இந்தப் படம் ரீலீசான நாளிலேயே இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால், கோபம் அடைந்த இயக்குநர் கஸாலி போலீசில் புகார் கொடுத்தார். உடனே, நடவடிக்கை எடுத்த போலீசார், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்துத்தான் படத்தின் திருட்டுப் பதிவு எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தியேட்டர் உரிமையாளர், ஆபரேட்டர் ஆகியோரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த திருட்டுக் கும்பல், மீண்டும் படு வேகமாக கிளம்பி இருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் படமே, இணையத்தில் வெளியாக, மனுஷனா நீ திரைப்படத்தின் இயக்குநர் கஸாலி கடும் கோபமாகி, முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் கஸாலி கூறியிருப்பதாவது:
தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன், மூவீஸ்தாஸ், தமிழ் மாஸ்டர்...என்று இன்னும் என்னென்னவோ தமிழ்ப் பெயர்களில் திருட்டுக் கும்பல் நம் தமிழ்ப் படங்களை வெளிவந்த அன்றே சுடச்சுட தியேட்டர்களில் திருடி நெட்டில் ஏற்றுகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் நடித்த, அதே சங்கத்தில் மிக அதிகப்படியாக வோட்டு வாங்கி செயற்குழு உறுப்பினராக ஜெயித்தவர் இயக்கிய ஆக்சன் திரைப்படம் இன்றே தியேட்டர்களில் திருடப்பட்டு வெளிவந்து விட்டது. நன்றாகத் தெரிகிறது... நம் தமிழ்நாட்டுத் தியேட்டர்களிலிருந்துதான் திருடப்படுகிறது என்று!
முன்பு வரை, அதாவது எட்டு மாதங்களுக்கு முன்பு வரை கியூப் நிறுவனத்திடம் திருட்டுப் பிரிண்ட் மற்றும் ரூ. 59,000/- கொடுத்தால் எந்தத் தியேட்டரிலிருந்து திருடப்பட்டது என்று சிவொலுசன் அனாலிசிஸ் செய்து ரிப்போர்ட் கொடுப்பார்கள். ஆனால், கடந்த எட்டு மாதங்களாக திருட்டுப் பிரிண்டையும், பணத்தையும் வாங்கிக் கொண்டு எங்கள் புரஜக்டர் இருக்கும் எந்தத் தியேட்டர்களிலிருந்தும் திருடப்படவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். அதற்கு சித்திரம் பேசுதடி - 2 முதற்கொண்டு பல படங்களை உதாரணம் சொல்லலாம். தியேட்டர்காரர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அவர்களைக் காப்பாற்றுகிறார்களாம்..! விளங்கவா செய்யும் நம் தொழில்?
நாசமாய்ப் போய்விடும் நம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு. இதைச் சில முறை வாய்மொழிப் புகாராகவும் கொடுத்தாகி விட்டது. ஏன் என்று கேட்கத்தான் யாருமில்லை. தேர்ந்தெடுத்த அமைப்புதான் கையாலாகாமல் காணமல் போய்விட்டது. இப்போது இருக்கும் ஆலோசனைக் குழு ஏன் வாழாவிருக்கிறது? என் மனுசனா நீ படத்தைத் திருடிய கிருஷ்ணகிரி ஸ்ரீகிருஷ்ணா தியேட்டர் உரிமையாளர் திருடன் கைது செய்யப்பட்டு இப்போதுவரை கேஸ் நடக்கிறது, அல்லது நடக்கிறதாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.
தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஆலோசனைக் குழுவிடம் நான் இதுவரை தியேட்டர் பைரஸிக்காக எடுத்த நடவடிக்கைகளின் தொகுப்பை 26 அட்டாச்மெண்ட்களோடு சுமக்க முடியாத வெயிட்டோடு பெரிய ஃபைலில் இட்டு, கடிதம் கொடுத்தேன். மூன்று மாதங்களைத் தாண்டிவிட்டது. இலவம்பஞ்சு மரத்தின் கீழ் கிளிபோல் உட்கார்ந்திருக்கிறேன். பார்ப்போம்.
என்ன ஆனாலும் சரி, என் படத்தைத் திருடியவனை நான் விடுவதாக இல்லை. இன்று ஆக்சன், நாளை சங்கத் தமிழன். இது ஒரு தொடர்கதை. கண் முன்னே திருட்டுப் பயல்களை வைத்துக் கொண்டு வாரா வாரம் பைரஸி பற்றிப் பேசுகிறோம். காத்திருக்கிறேன்... ஒருநாள் விடியாமல் போகாது....கஸாலி.
இவ்வாறு அந்தப் பதிவி கூறப்பட்டிருக்கிறது.