கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து |
இந்தியத் திரையுலகின் பெரும் இயக்குனர் என்று பேசப்படும் ஷங்கர், பெரும் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த், ஹிந்தித் திரையுலகின் வசூல் நட்சத்திரம் அக்ஷய்குமார் ஆகியோரது கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த வருடம் வெளிவந்து ஹிந்தியில் மட்டுமே லாபத்தைக் கொடுத்தது. மற்ற மொழிகளில் நகரப்பகுதிகளில் பெரும் லாபம் தந்தது.
அப்படத்தை சீனாவில் வெளியிட்டு அங்கு வசூல் சாதனை புரிய வைத்து விடுவார்கள் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் நம்பினார். இரண்டு முறை வெளியிட திட்டமிடப்பட்டு படத்தைத் தள்ளி வைத்து கடைசியாக கடந்த வாரம் வெளியிட்டார்கள். 48000 ஸ்கிரீன்களில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக முதலில் அறிவித்தார்கள். ஆனால், 11000 ஸ்கிரீன்களில் தான் படம் வெளியானதாகத் தகவல்.
படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் மற்ற இந்தியப் படங்களுடன் ஒப்பிடுகையில் வசூல் படுமோசமாகவே இருந்தது. சீனா ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போய்விட்டது. ஒரு வார வசூலாக சுமார் 21 கோடி வரை மட்டுமே 2.0 இதுவரை வசூலித்துள்ளது.
நேற்று சீனாவில் பல புதிய படங்கள் வெளிவந்ததால் 2.0 வின் மொத்த வசூல் அந்த 21 கோடியுடன் நிற்கும் நிலை உருவாகியது. சீனாவில் 500 கோடியாவது வசூலித்துவிடலாம் என்று தகவல் பரவியது. ஆனால், அதில் 4 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது.