வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் | இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன் | 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா |
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ‛கோமாளி'. நாளை(ஆக.,15) வெளிவரும் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதை என்னுடையது என்று பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தார்.
சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட குழுவினர் இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு பார்த்து இது உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கதைதான் என்பதை உறுதி செய்தனர். இதனால் படத்தில் கிருஷ்ண மூர்த்தியின் பெயரை போட கோமாளி இயக்குனர் பிரதீப்பும், தயாரிப்பாளர் ஐசரி கணேசும் ஒப்புக் கொண்டனர்.
இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு நஷ்ட ஈடாக பணம் எதுவும் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவலை எழுத்தாளர் சங்கம் வெளியிடவில்லை.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படமும் கதை திருட்டு பிரச்னையில் சிக்கிய போது இதேப்போன்றதொரு தீர்வே கிடைத்தது.