அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
எழுத்தாளராக இருந்து இயக்குனர் ஆனவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள் படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார் மாரி செல்வராஜ். தனது அடுத்த கதையை தயார் செய்து விட்ட மாரி செல்வராஜ் அதை தனுஷிடம் கூறி ஓகே வாங்கி விட்டார்.
தற்போது வெற்றி மாறனின் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். வடசென்னை 2ம் பாகத்தில் நடிக்கிறார். ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த படங்களை முடித்து விட்டு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. அண்ணன் செல்வராகவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.