'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
2016ம் ஆண்டு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பு என நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ம் தேதியன்று 'கொலையுதிர் காலம்' என்ற படத்தின் அறிவிப்பு ஒரு போஸ்டருடன் வெளியானது. கருப்பு வெள்ளை புகைப்படத்தில் நயன்தாராவின் வித்தியாசமான தோற்றத்துடன் இருந்த அந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முழு படப்பிடிப்பையும் லண்டனில் எடுத்து முடித்தார்கள். அப்படி ஒரு படப்பிடிப்பு நடந்த விஷயம் கூட வெளியில் அதிகம் தெரியவில்லை.
அதன்பின் படத்தின் இசை வெளியீடு நடந்த போது அந்த நிகழ்வில் ராதாரவி பேசி பரபரப்பு ஏற்படுத்திய பிறகுதான் இந்தப் படம் பற்றிய தகவல் வெளியில் தெரிய வந்தது. அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பிலிருந்தே யுவன்ஷங்கர் ராஜா வெளியேறிய விஷயமும், படத்திற்கு அவர் இசையமைக்கவில்லை என்ற விஷயமும் வெளிச்சத்திற்கு வந்தது. ஒற்றை வரியில், 'கொலையுதிர் காலம்' படத்தின் இசை நானில்லை' என அவர் டுவீட் செய்தார்.
ஜுன் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இன்றைய விளம்பரம் வரையிலும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று குறிப்பிடப்படவில்லை. திகில் படம் என்பதால் ஒருவேளை பின்னணி இசையே இல்லாமல் அமைதியாக ரசிகர்களை பயமுறுத்துகிறார்களோ...?.