'லியோ' வியாபாரத்தை பரப்புவது விஜய்யா, தயாரிப்பாளரா ? | ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம் | இரண்டாம் பாகத்தில் மீண்டும் 'பையா' கூட்டணி ? | ‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! |
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை ஆனந்தி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அதன் இரண்டாவது சீசனும் ஒளிபரப்பப்பட்டு, அதுவும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதையும், நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார். இதற்கான புரோமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஜோடி ஷோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆனந்தி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கப் போவதாக செய்தி பரவியது. இதை மறுத்து தற்போது அவர் பேட்டியளித்திருக்கிறார். அதில் ஆனந்தி கூறியிருப்பதாவது:
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள வேண்டும் என என்னை அணுகியது உண்மை. எனக்கு தற்போது, ஒண்ணரை வயதில் மகன் இருக்கிறான். அவனை, என்னுடைய நிகழ்ச்சிகளுக்காக, சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு நான் போக வேண்டும் என்றால் கூட, கணவரிடம் ஒப்புதல் வாங்கித்தான் அழைத்துக் கொண்டு போகிறேன். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக நூறு நாட்களுக்கு வீட்டை விட்டு நான் பிரிந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இயலாத காரியம். அதனால்தான், வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.