பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
கலாபக்காதலன், வந்தாமல, தேன்கூடு படங்களை இயக்கிய இகோர் இயக்கும் புதிய படம் வகிபா (வண்ணக்கிளி பாரதி). இதில் புதுமுகம் விஜய்கரன் ஹீரோவாக அறிமுகமாகிறார், மனிஷாஜித் ஹீரோயின். நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, ஏ.வெங்டேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார், முஜிப்ரஹ்மான் இசை அமைக்கிறார். படம் பற்றி இகோர் கூறியதாவது:
ஒரு தனி மனிதன் அவனோட ஜாதியை மறைத்து வாழும்போது ஈசியாக வாழ்ந்து விடுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் எனத் தெரிய வரும்போது அது அவனது வாழ்கையை குழப்புகிறது அல்லது கஷ்டத்தில் ஆழ்த்துகிறது. இதுதான் இந்த படத்தின் கதை.
பாரதி என்னும் இளைஞன் வண்ணக்கிளி என்னும் பெண்ணை காதலிக்கிறான், அவன் காதலுக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தாண்டி வாழ தொடங்கும்போது ஜாதி வெறி அந்த அப்பாவி காதலர்களை எப்படி துரத்துகிறது என்பதுதான் இந்த படம். சமூக நியாயம் கிடைக்காத ஒரு தனி மனிதன், எப்படி தன்னை தானே மறைத்துக்கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. என்கிற அவலத்தையும் அழுத்தமாகச் சொல்ல முயல்கிறது.
இந்த படத்தில் வரும் பாரதியைப் போல யாரவது ஒருவர் நம் அருகிலும் வாழலாம். எனவே மனிதன் சக மனிதனை தனக்குச் சமமாக மதிக்க வேண்டும் என்பதையும் ஜனரஞ்சகமாக பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகளோடு சொல்ல முயன்றிருக்கிறோம் என்கிறார் இகோர்.