ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு | வயதாவது, கடினமானது… 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷி சின்ஹா |
ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சம்பத் ராம், தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். காஞ்சனா 3 படத்தில் அவர் நடித்திருக்கும் அகோரி கதாபாத்திரம், அவரையே மறைத்துவிட்டு புதிய சம்பத்ராமை பார்க்க வைக்கிறது.
காஞ்சனா முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்பத்ராம், காஞ்சனா 3யில் அகோரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். கூன் வளைந்த முதுகோடு, படம் முழுவதும் குணிந்தபடியே நடித்திருக்கும் சம்பத்ராமின் நடிப்பும், அவரது அகோரி வேடமும் படத்தில் முக்கிய பங்குபெறுவதோடு, படத்தின் திருப்புமுனையாக அமைந்திருப்பதால், அவரது வேடத்திற்கும், அதில் அவர் நடித்த விதத்திற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த கேரக்டரில் முதலில் பாலிவுட் வில்லன் நடிகர் ஒருவர் நடிப்பதாக இருந்தது. அந்த நடிகர் இன்னொரு படத்தில் இதே அகோரி வேடத்தில் நடிப்பதால் அவர் இதில் நடிக்க முடியாமல் போக, சம்பத்ராமுக்கு அகோரி வேடம் போட்டு மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். அப்போது அவரை பார்த்த ராகவா லாரன்ஸ், ”இவரே சரியா இருக்கிறாரே, இவரை நடிக்க வச்சிரலாம்”, என்று கூறி சம்பத் ராமை நடிக்க வைத்திருக்கிறார்.
சம்பத்ராம் தற்போது, பிரபு சாலமன் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருவதோடு சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புது படம் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சத்யசிவா இயக்கி வெளியீட்டுக்கு தயராக உள்ள '1945' படத்திலும் சம்பத்ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டயின் 'கொலைகாரன்' படத்திலும் நடித்திருக்கிறார்.