விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம், அக்காலகட்டத்தில் வாழ்ந்த மெய்ஞானிகள் மற்றும் அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம் மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாகும்.
புகழ்பெற்ற இந்த நூல் தற்போது ஒலி வடிவில் (ஆடியோ புக்) வெளிவந்திருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதனை வெளியிட்டு பேசிய ரஜினி "இந்த புத்தகம் ஆன்மிக உலகத்தையே புரட்டி போட்ட புத்தகம் , அனைவரும் நம்பிக்கையோடு, பக்தியோடு புத்தகத்தில் இருப்பதை பின்பற்றினால், கோபம் குறைந்துவிடும் வாழ்க்கையில் துன்பத்தின் தாக்கம் இருக்காது" என்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்கள் அரசியல் பற்றி கேட்க முயற்சித்தனர். "இந்த புத்தகத்தை படியுங்கள். வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.