கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி |
அக்னி தேவி படத்திற்கு தடை கோரி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார் பாபி சிம்ஹா. அக்னி தேவ் படத்தின் பெயரை 'அக்னி தேவி' என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
பாபி சிம்ஹா அளித்த புகாரின் பேரில், அக்னி தேவி என்ற படத்தின் டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட (குற்ற எண் 406, 420, 469, & 470) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றத்தில் தடை கோரினார் பாபி சிம்ஹா. அதன்பேரில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் அக்னி தேவி படத்தினை வெளியிட தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் ஒருவரையும் நியமித்துள்ளது.
நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, அக்னி தேவி படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாபி சிம்ஹா மீது தயாரிப்பாளர் கொடுத்த புகார் மீதான விசாரணைக்கு பாபி சிம்ஹாவை தயாரிப்பாளர் சங்கத்தினர் பல முறை அழைத்தும் அவர் ஆஜராகவில்லை. கடைசியாக நேற்றும் அழைக்கப்பட்டார். நேற்றும் பாபி சிம்ஹா வரவில்லை. எனவே அவர் மீது ரெட் போட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.