ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
'நேருக்கு நேர்' படத்தின் மூலம் அறிமுகமானாலும், சூர்யாவின் நடிப்புத் திறமையை 'நந்தா' படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா. சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவாகவும், கமர்ஷியல் ஹீரோவாகவும் உயர்த்தியவர் இயக்குனர் கவுதம் மேனன்.
'காக்க காக்க, வாரணம் ஆயிரம்' என இரண்டு சூப்பர் ஹிட்களை கவுதம் மேனன், சூர்யா கூட்டணி கொடுத்தாலும், 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதை விஷயத்தால் முரண்பட்டு இருவரும் பிரிந்தார்கள். மாறி மாறி அறிக்கைவிட்டுக் கொண்டார்கள். அந்தக் கூட்டணி மீண்டும் இணையக் போகிறது என்று அடிக்கடி செய்திகள் வந்தாலும் அவை வந்த வேகத்தில் காணாமல் போயின.
இப்போது மீண்டும் அப்படி ஒரு செய்தி திரையுலகத்தில் பரவி வருகிறது. 'காக்க காக்க' படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணுவே, இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்து, இயக்குனர் கவுதம் மேனனிடம் கதை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டாராம். அதில் மீண்டும் சூர்யா, ஜோதிகா ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள். திருமணத்திற்குப் பின் ஜோதிகா நடிக்க வந்தபின் இன்னும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. அது 'காக்க காக்க 2' வில் நடக்கும் என்கிறார்கள்.
கவுதம் மேனன், சூர்யா மீண்டும் இந்தப் படத்தில் இணையப் போவது உறுதியாகுமா, அல்லது வந்த வேகத்தில் போகுமா என்பது விரைவில் தெரிய வரும்.