விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
70களின் இறுதியிலும் 80களிலும், 90களிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. அதன் பின் அரசியலில் இறங்கி தெலுங்கு தேசம் கட்சியில் சில காலம் இருந்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். எம்பி தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகவும் பதவி வகித்தார். அவரையும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் ஆக பதவி வகித்த அமர்சிங்கையும் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அமர் சிங்கைத்தான் தன் அரசியல் காட் பாதர் என்றவர் ஜெயப்பிரதா.
கடந்த சில வருடங்களாக அரசியலில் கூட ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் பேசியுள்ளார்.
“என்னுடைய மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்த போது அமர் சிங் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். நான் தினமும் அழுது கொண்டிருந்தேன். வாழ்வதற்கே பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளவும் விரும்பினேன். எனக்கு ஆதரவாக யாருமேயில்லை. அந்த கால கட்டத்தில் அமர் சிங் மட்டுமே ஆதரவாக இருந்தார். நாளை நான் உயிரோடு இருப்பேன் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளிவரும் போது அதைத்தான் என் அம்மாவிடம் சொல்வேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஜெயப்பிரதா மீண்டும் ஆந்திர அரசியலில் ஈடுபடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் அவர் இன்னும் தீவிர அரசியலில் இறங்கவில்லை.