அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
பாலிவுட்டை பொறுத்தவரை தற்போதும் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவர் ஷாருக்கான் தான். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அவருக்குள் இருந்துவரும் தீராத மனக்குறை ஒன்று சமீபத்தில் விழா ஒன்றில் அவர் பேசும்போது வெளிப்பட்டது. பொதுவாகவே முன்னணி ஹீரோக்களில் இருந்து வளரும் ஹீரோக்கள் வரை எல்லா நடிகர்களுக்கும் கட்டாயம் போலீஸ் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும்.
ஆனால், நடிகர் ஷாருக்கான் நடிக்க வந்த இந்த 25 ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. அப்படி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என சமீபத்தில் நடைபெற்ற மும்பை போலீஸ் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொண்டு தன் மனக்குமுறலை வெளியிட்டார் ஷாருக்கான்.
அவருடன் இந்த விழாவில் கலந்துகொண்ட ரன்பீர் கபூரும், தானும் நடிக்க வந்து இந்த பத்து வருடங்களில் தன்னையும் யாரும் போலீஸ் கேரக்டரில் நடிக்க அழைக்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
உடனே ஷாருக்கான் எங்கள் இருவரில் எனக்கு முதலில் போலீஸ் கேரக்டர் வரட்டும் நான் நடிக்கிறேன் என்று கூறினார்.. உடனே ரன்பீர் கபூர், ஷாருக் கான் போலீசாக நடிக்கும் அதே படத்தில் நான் கான்ஸ்டபிளாக நடிக்கவும் தயார் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.