சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் | எஸ்.பி.பி.,யின் 75வது பிறந்த நாள்: இசை நிகழ்ச்சிக்கு சரண் ஏற்பாடு | திருமணத்திற்கு பிறகு ஆனந்தி நடிக்கும் தமிழ் படம் | முடிவுக்கு வந்தது அநீதி | பிருத்விராஜ் படத் தலைப்பை மாற்ற வேண்டும்: இந்து அமைப்புகள் அக்ஷய்குமாருக்கு வேண்டுகோள் | யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் |
2017ம் டிசம்பர் 31-ந்தேதி அன்று தனது அரசியல் பிரவேசத்தை உறதிப்படுத்தினார் ரஜினி. அதையடுத்து ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து வருகிறார். மாவட்டந்தோறும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
ஆனபோதும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ரஜினி, பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்தநிலையில், நேற்று திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார் நடிகர் தனுஷ். அப்போது, ரஜினி அரசியலில் பிரவேசிக்கும்போது நீங்கள் எந்த வகையில் ஆதரவு கொடுப்பீர்கள்? என்று அவரிடம் மீடியாக்கள் கேள்வி கேட்டனர். ஆனால் அதுகுறித்து தனுஷ் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக கடந்து சென்று விட்டார்.
முன்பெல்லாம் ரஜினி குறித்த கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் கொடுப்பார் தனுஷ். ஆனால் இப்போது அவர் பதில் சொல்லாமல் போனது மீடியாக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.