என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
பிரபல சினிமா பைனான்சியர் ரகுநந்தன். இவரது மகன் மைத்ரேயா. இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. இதற்காக இயக்குனர் மிஷ்கினை அணுகி உள்ளார். அவரும் மைத்ரேயாவுக்கு ஏற்ற வகையில் சைக்கோ என்ற ஒரு கதை தயார் செய்து படம் எடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு அந்தக் கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து எடுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் மைத்ரேயா தன்னை வைத்து படம் எடுப்பதாக கூறி, ஒரு கோடி ரூபாய் மிஷ்கின், ஏமாற்றி விட்டதாக கூறியதோடு. அவர் மீதும் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் மைத்ரேயாவுக்கு கை கொடுத்துள்ளார். குமரவேலன், நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ், யுவன் யுவதி படங்களை இயக்கியவர். இது குறித்து மைத்ரேயா கூறியதாவது:
இது பார்வையற்ற ஒரு இளைஞனின் கதை. குமரவேலன் சொன்ன கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்து விட்டேன். என் தந்தை படத்தை தயாரிக்கிறார். பார்வையற்றவனாக நடிப்பதற்கு பயிற்சி பெற்று வருகிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்னை ஏமாற்றிய மிஷ்கினை விட மாட்டேன். அவர் மீது தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுப்பேன் என்றார்.