ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க எல்லை தாண்டி, 6 வருடம் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான இளைஞர் பற்றி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவராவது காதலியை பார்க்க எல்லை தாண்டினார். ஆனால் இதேபோல பாகிஸ்தானில் இருந்து அப்துல்லா என்பவரோ, தனது அபிமான நடிகரான ஷாருக்கானையும், அவருக்கு ஜோடியாக நடித்த கஜோலையும் பார்க்க வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் முறையான அனுமதியின்றி இந்திய எல்லையை தாண்டியபோது வாகாவில் பிடிபட்டார்.
தற்போது பதினெட்டு மாத சிறைவாசம் கழிந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இனிமேல் இப்படி முறையற்ற விதமாக இந்தியாவுக்குள் வரமாட்டேன் என கூறியுள்ள அவர், பாகிஸ்தான் திரும்புவதற்குள் ஷாருக்கானை சந்தித்துவிட விரும்புகிறாராம். அதன் மூலம் தான் சிறையில் அனுபவித்த வலிகள் பறந்துவிடும் என்கிறாராம் இந்த அப்பாவி ரசிகர்.