தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த பதினாரு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வரும் தமிழ் நடிகை த்ரிஷா. அவர் தற்போது, நடிகர் ரஜினியுடன் இணைந்து, பேட்ட திரைப்படத்திலும் நடித்துள்ளார். படம், வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் சூழலில், அந்த படம் ரிலீசுக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார் த்ரிஷா.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அவர் ஒரு ரகசிய தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில், த்ரிஷா கூறியிருப்பதாவது:
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னுடைய தோழி ஒருவருடன், வெளியில் சென்றேன். என் கையில் காசு இல்லை. ஒரு கடைக்குள் புகுந்தேன். அங்கிருந்த சாக்லேட் மற்றும் வாழைப்பழத்தை திருடிக் கொண்டு வந்து விட்டேன். அவற்றின் மதிப்பு இரண்டு டாலர். இனி அப்படியொரு சம்பவம் நடக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.