ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2007-2008ம் நிதி ஆண்டில் தனது வருமானத்திற்கு சேவை வரி கட்டவில்லை என்று கூறி ஜிஎஸ்டி வரி ஆணையம் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் இரு வங்கி கணக்குகளை முடக்கியதோடு, ஒரு வங்கி கணக்கில் இருந்து 40 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டது. இதுகுறித்து மகேஷ்பாபு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜி.எஸ்.டி ஆணையரக அறிக்கையின்படி கடந்த 2007-2008ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து பெற்ற வருமானத்திற்கு சேவை வரி கட்டவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் சேவை வரிக்குள் பிராண்ட் அம்பாசிடர் பணி கொண்டு வரப்படவில்லை 2010ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது வங்கி கணக்கை முடக்கியது தவறு. வங்கி கணக்கு முடக்கம் குறித்த விவகாரத்தில் வரி செலுத்துவோருக்கு ஆதரவான விதிமுறைகள் இருக்கும்போது, எந்த முன் அறிவிப்பும் இன்றி ஜிஎஸ்டி ஆணையரகம் வங்கி கணக்கை முடக்கி உள்ளது. இந்த பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.