இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சென்னையில் உள்ள சினிமா அடையாளங்களில் ஒன்று புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெஹா மால். தற்போது இது இடிக்கப்பட்டு, முதல் 3 மாடியில் தியேட்டர் மற்றும் மாலும். அதற்கு மேல் 14 மாடிக்கு அடுக்குமாடி குடியிருப்பும் கட்டப்படுகிறது. இதுகுறித்து அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1976ம் ஆண்டு அபிராமி தியேட்டர் கட்டப்பட்டது., 1982ல் மேலும் 2 தியேட்டர்கள் கட்டப்பட்டது. 2002ம் ஆண்டு மெகா மால் அமைக்கப்பட்டது. 2005ல் 7 நட்சத்திர அந்தஸ்தில் 6 தியேட்டர்கள் கட்டப்பட்டது. தற்போது சினிமா டிஜிட்டல் மயமாகிறது. ஆயிரம் பேர் அமர்ந்து பார்கும் தியேட்டர்களுக்கு வரவேற்பு இல்லை. இதனால் அபிராமி மெகா மால் வேறு வடிவம் பெறுகிறது.
தற்போதுள்ள மால் கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய வளாகம் அமைக்கப்படுகிறது. இதில் முதல் மூன்று மாடிகளில் திரையரங்கம், வணிக வளாகம் கட்டப்படுகிறது.அதற்கு மேல் 14 மாடிகள் கொண்ட அடுக்கமாடி குடியிறுப்பு கட்டப்படுகிறது. இந்த பணிகளுக்காக வருகிற பிப்ரவரி 1ந் தேதி முதல் அபிராமி மெகா மால் மூடப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.