போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
நடிகர் ஜெயம் ரவி, சினிமாவில் இயக்குநர் ஆகும் கனவோடு தான், சினிமாவுக்கே வந்தார். 2001ல் நடிகர் கமல் நடிப்பில் 'ஆளவந்தான்' படம் எடுக்கப்பட்டது. படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அவரிடம் உதவி இயக்குநராக பணியில் சேர்ந்து, 'ஆளவந்தான்' படத்தில் பணியாற்றியவர் தான் ஜெயம் ரவி.
அவருக்கு திடுமென நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்க, அதிலேயே தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்து விட்டார். இன்றைக்கு, வெற்றிகரமான நாயகனாக இருக்கும் அவருக்கு, சினிமா படம் இயக்க வேண்டும் என்ற தாகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இது தொடர்பாக ஜெயம் ரவி கூறியதாவது: எனக்கு நீண்ட நாட்களாக சினிமாவை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது. அதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவேன். அவசரப்படாமல் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்குவேன். எல்லோருக்கும் பிடித்த கதையம்சம் உள்ள ஒரு படத்தைத்தான் இயக்குவேன். படம் நிச்சயம் காமெடி படமாகத்தான் இருக்கும். அந்த காமெடி படத்தில் நடிகர் யோகி பாபு நடித்தால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தால், கட்டாயம் வாய்ப்பு அவருக்குத்தான்.