பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே சின்னத்திரைக்கு வந்தவர் குஷ்பு. 4 ஆண்டுகளாக அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சி, மிகவும் பிரபலம். நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஜாக்கெட்டுகளும் பிரபலம். அதன்பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மருமகள், குங்குமம், கல்கி, நம்ம குடும்பம், ருத்ரா உள்பட பல தொடர்களில் நடித்தார்.
நந்தினி, மாயா என்ற பிரமாண்ட தொடர்களை தயாரித்தார். அரசியல் பணிகள் காரணமாக சீரியலில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் தயாரித்த நந்தினி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இப்போது மீண்டும் சீரியலில் பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். அவரே தயாரிக்கும், லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் அவர் தான் கதையின் நாயகி. மகாலட்சுமி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினைகள் தான் கதை. இதில் குஷ்புவுடன் சுரேஷ், டெல்லி கணேஷ், சுதாசந்திரன், நட்சத்திரா, தனிஷா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தேவிபாலா கதை, திரைக்கதை எழுதுகிறார், ஜவஹர் இயக்குகிறார்.
இதுகுறித்து குஷ்பு கூறியதாவது: நந்தினி தொடரில் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் காட்சியில் தான் நடித்தேன். 20 நாட்கள் அதில் முகம் காட்டினேன். ஏதாவது ஒரு வகையில் முக்கியத்துவம் இல்லாவிட்டால் அங்கே எனக்கு வேலை இருக்காது. அந்தக் கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததால் தொடர்ந்து நடிக்கவில்லை. 'லட்சுமி ஸ்டோர்ஸ்' தொடரில் நான் தான் மையம். என்னை சுற்றித்தான் கதை நகரும். நல்ல கதாபாத்திரம் என்பதால் நடிக்கிறேன் என்றார்.