தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
மீ டூ புகாரில் கவிஞர் வைரமுத்து மீது குற்றச்சாட்டு கூறியவர் பாடகி சின்மயி. தமிழ் சினிமாவை பரபரப்பாக்கியது இந்த குற்றச்சாட்டு. இதுதொடர்பாக காரசாரமான விவாதங்கள், பேட்டிகள் என பல கடந்தன. டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ரூ 1.5 லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் வழங்கினால் சின்மயியை மீண்டும் சேர்த்து கொள்வோம் என டப்பிங் யூனியன் கூறியிருக்கிறது.
இதைமேற்கோள் காட்டி சின்மயி டுவிட்டரில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில், தமிழ் படங்களில் நான் வேலை செய்ய வேண்டும் என்றால் டப்பிங் யூனியனுக்கு மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் பணமும் செலுத்த வேண்டுமாம். 2006ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் ஈட்டியது. ஆனால் இப்போது என் வேலைக்கான உரிமையை பெற நான் ரூ.1.5 லட்சம் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது.
ஓரிரு படங்களில் டப்பிங் பேசிய பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் ஆயுள்கால உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2006 முதல் டப்பிங் யூனியனில் நான் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால் இப்போது புதிய உறுப்பினராக்கப்படுகிறேன்.
டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக நான் மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன். டப்பிங் யூனியனில் உறுப்பினராக வேண்டுமானால் சங்க விதிப்பிடி ரூ.2,500 செலுத்த வேண்டும், அப்படியிருக்கையில் ரூ.1.5 லட்சம் மற்றும் மன்னிப்பு என்ன காரணம் என தெரியவில்லை, வியப்பாக உள்ளது.
இவ்வாறு சின்மயி பதிவிட்டுள்ளார்.