தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், பிற்பாடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் தன்னோடு கலந்து கொண்ட மகத்துடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதை இருவரும் மறுத்து விட்டனர்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி முடிவடைந்த பின், அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதோடு, சில படங்களிலும் நடித்து வருகிறார். இப்படி தொலைக்காட்சி மற்றும் சினிமா என அவர் ரொம்பவே பிசியாக இருந்தாலும், அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் மூலம், தன்னுடைய கவர்ச்சியான உடலை அப்பட்டமாக வெளியே காட்டும் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்காக எடுக்கப்பட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் அனைத்தையும், இன்ஸ்டாகிராம் மூலம் எடுத்து வெளியே விட்டிருக்கிறார். இதை பார்க்கும் சில ரசிகர்கள் கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதை யாஷிகா ரசிக்கிறார். சினிமாவில் பிஸியாக தொடங்கியிருக்கும் யாஷிகா, இதற்காகவே, இப்படிப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிடுவதாகவும் கூறுகின்றனர்.