டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் ஜெயம் ரவி, நடிகை ராக்ஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்தப் படம் 'அடங்க மறு'. கடந்த 21ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன; அதனால், படத்தில் இருந்து அப்படிப்பட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டு, வழக்கறிஞர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள், வரம் ஜனவரி 2வது வாரத்துக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர். இதனால், சிக்கலில் இருந்து அந்தப் படம் தப்பித்தது. காரணம், ஜனவரி இரண்டாவது வாரம் பொங்கல் வருகிறது.
பொங்கலை ஒட்டி 'விஸ்வாசம்', 'பேட்ட' உள்ளிட்ட பல படங்கள் ரிலீசாகின்றன. அதற்காக, பல தியேட்டர்களில் இயற்கையாகவே 'அடங்க மறு' படம் தூக்கப்பட்டு விடும். அதுவரை தான், 'அடங்க மறு' படமே ஓடும் என்பதே யதார்த்தமாக இருப்பதால், அதன்பின், என்ன தீர்ப்பு வந்தாலும், 'அடங்க மறு' படத்துக்கு பாதிப்பு இருக்காது.